×

பானி புயல் காரணமாக ரயில்கள் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: ஹால்டியா- சென்னை சென்ட்ரல் இடையே  இன்று காலை 11.30 மணிக்கு இயக்கப்படும் அதிவிரைவு ரயில், ஹவுரா- சென்னை சென்ட்ரல் இடையே இன்று பிற்பகல் 2.50 மணிக்கு இயக்கப்படும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், ஹவுரா- யஷ்வந்த்பூர் இடையே இன்று இரவு 8.35 மணிக்கு இயக்கப்படும் ரயில், ஹவுரா- சென்னை சென்ட்ரல் இடையே இன்று இரவு 11.45 மணிக்கு இயக்கப்படும் ரயில், இன்று காலை 8.45 மணிக்கு சென்னை சென்ட்ரல்- ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், இன்று மாலை 5 மணிக்கு ஹவுரா- எர்ணாகுளம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. மேலும் 6ம் தேதி இரவு 9.45 மணிக்கு தாம்பரம்-ஹவுகாத்தி இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : storm ,Bani , Trains canceled , Bani storm
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...