×

தென்சென்னை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயவர்தனின் வெற்றிக்காக பாமகவினர் உழைக்க வேண்டும்

சென்னை: தென்சென்னை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிடும் ஜெயவர்தனைஆதரித்து ஆலந்தூரில் நடந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது: தென்சென்னை நாடாளுமன்ற வேட்பாளர் ஒரு நல்ல இளைஞர். நல்ல வேட்பாளரை கொடுத்திருக்கின்றனர். 2வது முறையாக போட்டியிடுகிறார். என்னை போல் டாக்டருக்கு படித்தவர். மக்களுக்கு என்ன தேவையோ, அவற்றை தீர்ப்பதற்கு தொடர்ந்து 5 ஆண்டுகள் சேவை செய்தார். மீண்டும் சேவை செய்ய அவரது வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும். மத்திய சென்னை வேட்பாளர்களுக்கு அதிமுகவினர் கடுமையாக உழைப்பது போன்று, தென்சென்னை வேட்பாளர் வெற்றி பெற பாமகவினர் கடுமையாக உழைக்க வேண்டும். பாமகவினர் கடுமையாக உழைக்கிறார்கள் என்று என்னிடம் ஜெயவர்தன் சொல்ல வேண்டும். கடுமையாக உழைக்கிறீர்கள். இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

தென்சென்னை வாக்காளர்கள் அனைத்தும் அறிந்தவர்கள். வேட்பாளர் எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவர். தொகுதி மக்களுக்காக பாடுபட்டு வருகிறார். இந்த தொகுதியில் போக்குவரத்து உள்ளிட்ட பல பிரச்சனைகள் தீர்க்க பாமக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதை அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளது. டிஎன்டிஎஸ் என்ற திட்டம் அமலாக்கப்பட்டால் போக்குவரத்து நெரிசல் இருக்காது. இதனால் டீசல், நேரம் மிச்சமாகும். சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்காது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் ஒவ்வொரு 5 நிமிடத்திற்கும் பஸ்கள் இயக்கப்படும். அதில் பணக்காரர்கள் கூட பயணம் செய்யலாம். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : PMK ,Jayawardene ,Senate ,South ,AIADMK , South Chennai, AIADMK candidate, Jayawardena, Pamaga
× RELATED எப்போது வேண்டுமானாலும் மோடியை நான்...