×

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் சிறைபிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் 500க்கும் அதிகமான விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இவர்களில் சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் விரட்டியடித்தனர். மேலும் தங்கச்சிமடத்தை சேர்ந்த படகில் இருந்த மீனவர்கள் 4 பேரை விசைப்படகுடன் சிறை பிடித்தனர். அவர்களை காங்கேசன் கடற்படை முகாமுக்கு அழைத்து சென்றனர். விசாரணைக்கு பின்பு மீனவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இலங்கை கடற்படை விரட்டியடித்ததால் அச்சமடைந்த மற்ற மீனவர்கள் வேறு பகுதிகளுக்கு சென்று மீன் பிடித்து விட்டு, நேற்று காலை குறைந்த அளவு மீன்களுடன் கரை திரும்பினர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : fishermen ,Rameswaram , Rameswaram, fisherman, 4 people, jail
× RELATED இலங்கை சிறையிலிருந்து...