×

கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ்: கமிஷனர் பிரபாகர் அறிவிப்பு

சென்னை: முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத கோயில்களில் பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் பொங்கல் போனஸ் 1000 வழங்க கமிஷனர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர், அனைத்து செயல் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பொங்கல் கருணைக் கொடை 1000 என்பது முழு நேரம், பகுதி நேரம், தொகுப்பூதியம், தினக்கூலி பணியாளர்கள் உட்பட முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத அனைத்து கோயில்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி 2019-20ம் ஆண்டில் 240 நாட்களும், அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கருணை கொடையாக 1000ம், 2019-20ம் ஆண்டில் 6 மாதத்திற்கு மேல் 240 நாட்களுக்குள் பணியாற்றிய பணியாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இத்தொகை வழங்கப்பட வேண்டும் என்ற நிபந்தனைகளுக்குட்பட்டு இத்தொகையை வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது….

The post கோயில் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ்: கமிஷனர் பிரபாகர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Prabhagar ,Chennai ,Commissioner ,Dinakaran ,
× RELATED வாக்காளர் பட்டியலில் பெயர்...