×

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் துணைவியார் கவுரவம்மாள் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:மக்கள் கவிஞரும்-சமூக சீர்திருத்தக் கருத்துக்களை மிக எளிமையான நடையில் மக்களிடத்தில் எடுத்துச் சென்றவருமான பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி கவுரவம்மாள் உடல்நலக் குறைவு காரணமாக மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையுற்றேன். அவரது மறைவிற்கு திமுக சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.“கண்களை மூடுகிறேன்-கல்யாணம் தெரிகிறார்-ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்- கல்யாணம் இல்லை- கலையுலகு இருட்டாகியிருக்கிறது” என்று திராவிட மற்றும் கம்யூனிஸ சிந்தனை கொண்ட பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எதிர்பாராத இளம் வயது மரணத்தின் போது உருக்கமாக தலைவர் கலைஞர் வெளியிட்ட இரங்கல் செய்தியை நினைவு கூர்ந்து,  இளம் வயதில் தன் கணவரை இழந்தாலும், தன்னிகரில்லா தன்னம்பிக்கையுடன் தன் ஒரே மகனை வளர்த்து-ஆளாக்கி- அரசு அதிகாரியாகவும் உருவாக்கிக் காட்டி-  சமூகத்தில் பெண்களின் துணிச்சலுக்கு மிகச்சிறந்த ஓர் அடையாளமாக விளங்கியவர் கவுரவம்மாள். அவரை இழந்து வாடும் மகன் குமாரவேலுவிற்கும், உறவினர்களுக்கு ஆறுதலை  தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மனைவி க.கவுரவம்மாள் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனும்  இரங்கல் தெரிவித்துள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kavaravamal ,Pattukottai Kalyanasundaram ,cousin ,MK Stalin , Pattukottai ,Kalyanasundaram, Wife, MK Stalin ,mourning
× RELATED செங்குன்றம் அருகே சொத்து தகராறில்...