×

எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் எஸ்ஐயை தாக்கி சீருடை கிழிப்பு: வக்கீல் மீது வழக்குப்பதிவு

சென்னை: எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் எஸ்ஐயை தாக்கி, சீருடையை கிழித்த வக்கீல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எழும்பூர் நீதிமன்றத்தில் ேநற்று முன்தினம் காலை வழக்கு விஷயமாக வந்த வசீகரன் என்பவரிடம், வக்கீல் ஞானம் என்பவர் தகராறில் ஈடுபட்டு, தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வசீகரன், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த எஸ்ஐ தேசிங்குராஜா (51), என்பவரிடம் தெரிவித்துள்ளார். இதுபற்றி விசாரணை நடத்திய எஸ்ஐயிடம், வக்கீல் ஞானம் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவர் சட்டையை பிடித்து இழுத்துள்ளார்.

இதனால், அவர் சீருடை கிழிந்தது. பின்னர், முகம் மற்றும் முதுகில் பலமாக தாக்கியுள்ளார். இதை பார்த்த சக போலீசார் மற்றும் வக்கீல்கள் ஓடிவந்து, சண்டையை விலக்கி விட்டனர். இதையடுத்து, வசீகரன் அங்கிருந்து தலைமறைவானார். இதுகுறித்து எஸ்ஐ அளித்த புகாரின் பேரில், பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்பட 3 பிரிவின் கீழ் வக்கீல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Attack ,Egmore Courthouse ,Lawyer , Attack, SI, Egmore Court, Lawyer
× RELATED போராட்டம் நடத்த இருந்த நிலையில்...