×

திருநாவுக்கரசு பண்ணை வீட்டில் சிபிசிஐடி மீண்டும் சோதனை: ரகசியமாக வந்து சென்றதாக பரபரப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன், சதீஸ், வசந்தகுமார் ஆகிய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் திருநாவுக்கரசின் நண்பரும் அதிமுக பிரமுகருமான பார் நாகராஜிக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பி வரவழைத்து நேற்று முன்தினம் விசாரணை நடத்தினர். நேற்று 2வது நாளாக அவரிடம் விசாரணை நடந்தது.இந்நிலையில் சின்னப்பம்பாளையத்தில் உள்ள திருநாவுக்கரசின் பண்ணை வீட்டில் 2வது முறையாக சிபிசிஐடி போலீசார் ரகசியமாக  பைக்கில் சென்று சோதனை செய்ததாக கூறப்படுகிறது.  மணிவண்ணன் ஜாமீன் மனு தள்ளுபடி: பாலியல் சம்பவத்தில்  புகார் கொடுத்த பெண்ணின் அண்ணனை தாக்கிய வழக்கில்  மணிவண்ணன் கடந்த 25ம் தேதி கோவை சிஜேஎம் கோர்ட்டில் சரணடைந்தார். இதன்பின், நீதிமன்ற காவலில் அடைத்தனர். இவ்வழக்கில் ஜாமீன் வழங்கக்கோரி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் மணிவண்ணன் மனு  தாக்கல் செய்தார். அம்மனுைவ நேற்று நீதிபதி நாகராஜ்  தள்ளுபடி  செய்து உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CBCIT ,Thirunavukara ,farm house , Thirunavakarasu ,farmhouse, CID
× RELATED மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில்...