லக்னோ: பாஜ.வில் இருந்து விலகிய எம்பி அன்சுல் சர்மா, சமாஜ்வாடியில் சேர்ந்துள்ளார்.மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வேட்பாளர் பட்டியலை பாஜ உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து வருகின்றன. இதில், போட்டியிடுவதற்கு வாய்ப்பு மறுக்கப்படுவதால் அதிருப்தி அடையும் எம்பி.க்கள் வேறு கட்சிகளுக்கு தாவி வருகின்றனர். உத்தரப் பிரதேசத்தின் ஹர்டாய் மக்களவை தொகுதியில் கடந்த முறை பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அன்சுல் சர்மா. இம்முறை அவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்கு பதிலாக ஜெய் பிரகாஷ் ராவந்தை கட்சி மேலிடம் வேட்பாளராக அறிவித்துள்ளது.
இதனால் அதிருப்தி அடைந்த சர்மா, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார். இதுகுறித்து அன்சுல் சர்மா கூறுகையில், “பாசி சமுதாய மாநாட்டின்போது கோயில் வளாகத்தில் வைத்து மதுபானங்கள் விநியோகம் செய்யப்பட்டதை எதிர்த்தேன். அதற்காக தான் எனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. நான் எந்த நிபந்தனையும் இன்றி சமாஜ்வாடியில் இணைந்துள்ளேன்” என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி