×

களக்காடு மலையடிவாரத்தில் அட்டகாசம் ஒற்றை யானையை விரட்டும் பணி தீவிரம்: வனத்துறையினர் விடிய, விடிய ரோந்து

களக்காடு: களக்காடு மலையடிவாரத்தில் அட்டகாசம் செய்து வரும் ஒற்றை காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் விடிய, விடிய ரோந்து பணியில் ஈடுபட்டனர். நெல்லை மாவட்டம் களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகம் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கு புலி, சிறுத்தை, யானை, கரடி, செந்நாய், நீலகிரிவரையாடு, சிங்கவால் குரங்கு உள்ளிட்ட பல்வேறு வகை விலங்கினங்கள் உள்ளன. இவைகள் அவ்வவ்போது மலையடிவார பகுதியில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்துவது வழக்கம். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவில் களக்காடு அருகே சிதம்பரபுரம் அகலிகை சாபம் தீர்த்த அய்யன் சாஸ்தா கோயில் மலையடிவார பகுதியில் ஒற்றை யானை புகுந்தது. இந்த யானை வனப்பகுதியில் உள்ள 3 பனைகளை சாய்த்தது.

அதன் பின் வனப்பகுதியில் இருந்து வெளியேறி தனியார் தோட்டத்தில் இருந்த ஒரு பனை மரத்தையும் வேரோடு சாய்த்தது. தொடர்ச்சி9யாக பனை மரம் சாய்ந்து விழுந்த சத்தத்தை கேட்ட விவசாயிகள் அங்கு சென்று பார்த்த போது ஒற்றை யானை பனை மரங்களை சாய்த்தது தெரியவந்தது. இதுகுறித்து அவர்கள் களக்காடு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் உத்தரவின் பேரில் வனசரகர்கள் களக்காடு புகழேந்தி, திருக்குறுங்குடி கமலக்கண்ணன் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று யானை சாய்த்த பனை மரங்களை பார்வையிட்டனர். மேலும் யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுத்தனர்.

அதன்படி நேற்று இரவில் விடிய, விடிய யானை விரட்டும் பணி நடந்தது. யானை வனப்பகுதியில் இருந்து வெளியேறும் பகுதியில் தீ வைத்து தடுப்பு ஏற்படுத்தினர். இதற்காக பனை மரங்கள், காய்ந்த புதர்களிலும் தீ வைக்கப்பட்டது. மேலும் தீ பந்தங்களுடன் ரோந்தும் சுற்றி வந்தனர். அத்துடன் வெடிகளும் போடப்பட்டது. இதையடுத்து நேற்று யானை வெளிவரவில்லை என்று வனத்துறையினர் தெரிவித்தனர். யானை வனப்பகுதிக்குள் செல்லும் வரை இப்பணி தொடரும் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : mountain ,Kalakkadu ,forest , Fielding, single elephant, repulsive work, intensity
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...