×

பா.ஜ. வை தோளில் சுமந்து வரும் எடப்பாடி: திருப்பூர் இ.கம்யூ. வேட்பாளர் சுப்பராயன் பேச்சு

திருப்பூர் மக்களவை தொகுதி வேட்பாளர் சுப்பராயனுக்கு ஓடக்காடு பகுதியில் நடந்த கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சுப்பராயன் பேசியதாவது: பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி.  வேலையில்லா திண்டாட்டம், தொழில் நசிவு, பொதுத்துறை நிறுவனங்களை முடக்கி  தனியார் கார்பரேட் நிறுவனங்களை ஊக்குவித்தது போன்ற செயல்களால் மக்களின் மதிப்பை இழந்த பா.ஜனதா   கட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தோளில் சுமந்து கொண்டு  வருகிறார். மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்ததற்கு பின்னர்  அனைத்து அத்தியாவசியப் பண்டங்களின் விலையும் உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ்  விலை உயர்ந்துள்ளது.

பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால் 100 நாளில் விலைவாசியை குறைப்போம் என்று மோடி கூறினார். வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும்  கருப்பு பணத்தை மீட்டு ஒவ்வொரு குடிமகனின் வங்கி கணக்கிலும் 15 லட்சம்   போடுவேன் என்றார். அவர் சொன்ன எதையும் நிறைவேற்றவில்லை. வறுமை காரணமாக விவசாயிகள் தற்கொலை  செய்துகொள்கிறார்கள். பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. நடவடிக்கைகள் தொழில்களை நாசமாக்கிவிட்டது. மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்ட அந்தக் கட்சியை தமிழகத்தில் எடப்பாடி  பழனிசாமி இப்போது தோளில் சுமந் கொண்டு வருகிறார். அதிமுக கூட்டணி  தோற்கடிக்கப்பட வேண்டும்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Candidate Speaker ,Tirupur E. , BJP,shoulder, Ettappadi,carrying, Tirupur e. Candidate, Speaker
× RELATED இந்திய மகள்களின் பாதுகாப்பை விட...