புதுடெல்லி: பாகிஸ்தானின் தார்கி நகரைச் சேர்ந்த 2 சிறுமிகள் ஹோலி பண்டிகையின்போது கடத்தப்பட்டுள்ளனர். அவர்கள் இஸ்லாம் மதத்துக்கு மாற கட்டாயப் படுத்தப்பட்டதாகவும் அந்நாட்டு பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனை கண்டித்து அந்த பகுதியை சேர்ந்த இந்து சமூகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.
இந்நிலையில் இதுெதாடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்திடம் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா விளக்கம் கேட்டுள்ளார்.இதற்கிடையே, சிறுமிகள் காணாமல் போன சம்பவம் தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி