×

மூர்மார்க்கெட், வில்லிவாக்கம், திருவள்ளூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை:  தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை மூர்மார்க்கெட், வில்லிவாக்கத்தில் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. திருத்தணி- அரக்கோணம் இடையே காலை 8.50 மணிக்கும், திருத்தணி- மூர்மார்க்கெட் இடையே காலை 9.40 மணிக்கு சிறப்பு ரயில்கள் ஆவடி வரை இயக்கப்படுகிறது.மேலும் அரக்கோணம்- மூர்மார்க்கெட் இடையே காலை 8.10 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆவடி வரையும், அரக்கோணம்- திருத்தணி இடையே காலை 11.55, 1.50, 2.25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. மேலும் திருவள்ளூர்- மூர்மார்க்கெட் இடையே காலை 9.10 மணிக்கும் புறப்படும் ரயில் ஆவடி வரையும், திருவள்ளூர்-மூர்மார்க்கெட் வரை இயக்கப்படும் மின்சார ரயில் திருவள்ளூரில் இருந்து பிற்பகல் 1.15 மணிக்கு இயக்கப்படும்.

மேலும் ஆவடி-பிடிஎம்எஸ் இடையே பிற்பகல் 1.50 மணிக்கும், ஆவடியில்- திருத்தணிக்கு இடையே பிற்பகல் 3 மணிக்கும், பிடிஎம்எஸ்-மூர்மார்க்கெட் இடையே காலை 10.30 மணிக்கும் இயக்கப்படும் சிறப்பு ரயில் ஆவடி வரை இயக்கப்படுகிறது. அதைப்போன்று காலை 9.45 மணிக்கு மூர்மார்க்கெட்- அரக்கோணம் இடையேயும், கும்மிடிப்பூண்டி- சென்னை கடற்கரை இடையே காலை 8.50 மணிக்கு இயக்கப்படும் ரயில் மூர்மார்க்கெட் வரை இயக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Murmarket ,Villavikvam ,Tiruvallur , Murmkarte, Villavikvam and Tiruvallur
× RELATED மீஞ்சூர் பகுதியில் ஓடும் காரில்...