சென்னை: புழல் சிறையில் தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் உள்பட 51 கைதிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர். தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு நேற்று துவங்கியது. இந்நிலையில், தீவிரவாதி போலீஸ் பக்ருதீனும் தேர்வு எழுதினார். இவர் மட்டும் பாதுகாப்பு நலன் கருதி புழல் சிறை விசாரணை சிறையில் தனியாக தேர்வு எழுதுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறைச்சாலைகளில் கைதிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவது இது பதினோராவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி