×

நீதிமன்ற அறையில் நுழைந்து துப்பாக்கி திருடிய வாலிபர் கைது: அம்பத்தூரில் பரப்பரப்பு

அம்பத்தூர்:  அம்பத்தூர், காமராஜபுரம் காவல் நிலையம் பின்புறத்தில் ஒரு வாலிபர் துப்பாக்கியுடன் தெருவில் சுற்றிக் கொண்டிருப்பதாக சென்னை மேற்கு மண்டல இணை ஆணையாளர் விஜயகுமாரிக்கு நேற்று மாலை ரகசிய தகவல் வந்தது. அவரது உத்தரவின்பேரில் அம்பத்தூர் மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையில் எஸ்.ஐ கோபி, ஏட்டுக்கள் பலராமன், தாமோதரன் ஆகியோர் வாலிபரை தேடினர்.  இந்நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் வாலிபரை  அதே பகுதியில் தனிப்படையினர் சுற்றிவளைத்து பிடித்து, சோதனை செய்தபோது,  பாக்கெட்டில் ஒரு துப்பாக்கியும்,  8 தோட்டாக்களும் இருந்தது தெரியவந்தது.   அவரிடம் இருந்து துப்பாக்கி மற்றும் தோட்டக்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில்,  துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் பாபு (19) என்பதும், இவர் அம்பத்தூர் காமராஜபுரம், பெரியார் தெருவில் வசித்து வருகிறார். இவர், கடந்த டிசம்பர் மாதம் அம்பத்தூர் பகுதியில் பேட்டரி திருடிய வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டவர். கடந்த மாதம் தான் ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ளார். அதுமட்டுமின்றி, தினமும் அம்பத்தூர் காவல் நிலையம் வந்து கையெழுத்திட்ட செல்கிறார்.

இதற்கிடையில், நேற்று மதியம் பாபு அம்பத்தூர் பழைய கோர்ட் வளாகத்திற்கு வந்துள்ளார். அங்கு, ஒரு அறையில் மதுபானங்கள் உள்ளிட்ட பொருள்கள் வைக்கப்பட்டுள்ளது. அந்த அறையில் இருந்து மதுபான வாடை வந்துள்ளது. இதனால், பாபு மதுபானம் அருந்தும் ஆசையில், அந்த அறையின் உடைந்த ஜன்னல் வழியாக உள்ளே சென்று உள்ளார். அங்கு, மதுபானம் மூட்டை கீழே துப்பாக்கியும்,  எட்டு தோட்டாக்களும் இருந்துள்ளது.  இதனை பார்த்த பாபு, ஒரு பீர் பாட்டிலுடன், துப்பாக்கி மற்றும் தோட்டாவை எடுத்துக்கொண்டு வெளியேறிவிட்டான். இது குறித்து, ரகசிய தகவல் போலீசாருக்கு வந்தது. இதையடுத்து போலீசார் அவரை சுற்றிவளைத்து பிடித்துள்ளனர் என்பது தெரியவந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : courthouse ,Ambattur , The court room, entered the gun and the young man arrested
× RELATED சென்னையில் இருந்து விமான நிலையம் வந்த...