மணப்பாறை,: மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று திருச்சி மாவட்டம் மருங்காபுரி தொகுதியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ராஜாஜியும் அண்ணாவும் தனித்தனி கொள்கை உடையவர்கள். பொது எதிரியான காங்கிரசை வீழ்த்த கூட்டணி அமைத்தார்கள். அதுபோல பா.ஜ. அதிமுகவுக்கு தனித்தனி கொள்கை இருந்தாலும் பொது எதிரியான காங்கிரசை வீழ்த்த கூட்டணி அமைத்திருக்கிறோம். மத்தியில் கூட்டணி ஆட்சி அமைந்தால் மாநிலங்களுக்கு தாராளமாக நிதி கிடைக்கும் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி