சென்னை: நெற்குன்றம் பட்டேல் ரோடு மந்தைவெளி தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (50), லாரி டிரைவர். இவரது மனைவி விமலா (45). கடந்த 18ம் தேதி ரமேஷ் மது போதையில் மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த விமலா, அருகில் இருந்த சுடு நீரை எடுத்து ரமேஷ் மீது ஊற்றியுள்ளார். இதில், படுகாயமடைந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரமேஷ், நேற்று இறந்தார். கோயம்பேடு போலீசார், இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து விமலாவை தேடி வருகின்றனர்.
* சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள சிவாஜி மணிமண்டபம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது போலீஸ் ஜீப் கண்ணாடியை உடைத்த மந்தைவெளி மலையப்பன் தெருவை சேர்ந்த சிவனந்தன் (26) என்வரை போலீசார் கைது செய்தனர்.
* சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே நேற்று சுற்றித்திரிந்த இளம்பெண்ணை ரயில்வே போலீசார் மீட்டு விசாரித்தபோது, கோயம்புத்தூர், காந்திபுரம், கணபதி காலனி, சாஸ்திரி நகரை சேர்ந்த கவிதா (19), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பதும், சற்று மனநலம் பாதிக்கப்பட்ட இவர் வீட்டில் இருந்து தெரியாமல் ஓடி வந்ததும் தெரிந்தது. அவரை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். இதுபற்றி அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
போக்சோவில் வாலிபர் கைது: எண்ணூரை சேர்ந்த திவ்யா (12), (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) என்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கொருக்குப்பேட்டை ஆனந்தநாயகி நகர், 5வது தெருவை சேர்ந்த செல்லக்குட்டி (21) என்பவரை போலீசார் பொக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி