×

திருப்பரங்குன்றத்தில் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்.: பட்டப்பகலில் நிகழ்ந்த துணிகர வழிப்பறி சம்பவம்

திருப்பரங்குன்றம்: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. திருப்பரங்குன்றம் மேலஅனுப்பானடி பகுதியை சேர்ந்த சக்திப்ரியா வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்றுள்ளார். அப்போது சக்திப்ரியாவை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் சென்ற கொள்ளையர்கள் ஒரு நொடிப்பொழுதில் அவர் அணிந்து இருந்த ஆறு அரை பவுன் தங்க சங்கலியை பறித்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இந்த வழிப்பறி சம்பவம் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தங்க சங்கிலியை பறிகொடுத்த சக்திப்ரியா அளித்த புகாரின் பெயரில் அவனியாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த கொள்ளையர்களை தேடிவருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. …

The post திருப்பரங்குன்றத்தில் தங்க சங்கிலியை பறித்துச் சென்ற கொள்ளையர்கள்.: பட்டப்பகலில் நிகழ்ந்த துணிகர வழிப்பறி சம்பவம் appeared first on Dinakaran.

Tags : Tirapparankuram ,Gradhakal ,Tirupparankuram ,Madurai ,Tiruparangunam ,Dinakaran ,
× RELATED மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய...