×

திருப்போரூரில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றவாளி இளைஞருக்கு தூக்கு தண்டனை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே திருப்போரூரில் 2017ம் ஆண்டு 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இளைஞர் அசோக்குமாருக்கு தூக்குதண்டனை விதித்து செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
 
9-ம் வகுப்பு சிறுமி பாலியல் பலாத்காரம்

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் அருகே ஆலத்தூர் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர்  9-ம் வகுப்புப் படித்து வந்தார். அச்சமயம் சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றிருந்தபோது, அவரது அண்டை வீட்டுக்காரரான 24 வயதுடைய அசோக் என்பவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பினர்.

குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

இதைத்தொடர்ந்து அவரது தாய் வீட்டுக்கு வந்தவுடன், இந்தச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், காவல்துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறை, சிறுமியின் உடலை மீட்டு பிரதேப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தது. காவல்துறை நடத்திய விசாரணையில், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனை அடுத்து உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கிய போலீசார் அக்கம்பக்கத்து வீட்டார் அளித்த தகவலின் அடிப்படையில் அந்த அசோக் என்ற நபரை கைது செய்தனர். பின்னர் குண்டர் சட்டத்தில் அசோக் குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.  

தூக்கு தண்டனை விதிப்பு

கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அசோக்குமார் என்ற வாலிபரை சாகும் வரை தூக்கிலிட வேண்டும் என்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : death , Execution, sentence, rape, sexual assault, kanchipuram, rape
× RELATED பாட்னா ரயில் நிலையம் அருகே ஓட்டலில்...