×

பிரியாணி கடைக்காரர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது

பெரம்பூர்: தண்டையார்பேட்டை திலகர் நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ரவி (43). இவர், தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே கடந்த 20 வருடங்களாக  தள்ளுவண்டியில் பிரியாணி கடை நடத்தி வந்தார். இவரை தண்டையார்பேட்டை காவல் நிலையம் அருகே  3 பேர் ஓட ஓட விரட்டி வெட்டினர்.  உயிருக்கு போராடிய ரவியை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை  பலனின்றி ரவி இறந்தார்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரவுடி ரேடியோ விஜி என்பவர், ரவி கடையில் பிரியாணி சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்காமல்  சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில், ரவியின் மைத்துனர் வடிவேல், பிரியாணி கிண்டும் கரண்டியால் ரேடியோ விஜியை தாக்கி, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில்  ஒப்படைத்துள்ளார்.

போலீசார் வழக்கு பதிந்து, ரேடியோ விஜியை புழல் சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்து வெளியே வந்த ரேடியோ விஜி, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, பழிக்கு பழியாக ரவியை வெட்டிக்கொலை  செய்தது தெரிய வந்தது.  இந்நிலையில், பிரியாணி கடைக்காரர் கொலை தொடர்பாக காஞ்சிபுரத்தில் பதுங்கியிருந்த தண்ைடயார்பேட்ைட திலகர் நகர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த ரேடியோ விஜி (28), புளியந்தோப்பு  பகுதியை சேர்ந்த ராம்குமார் (28) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் தீபக் (27) என்பவர் பெரும்புதூர் கோர்ட்டில் சரணடைந் தார் .

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : murder ,Brihani , main culprits,arrested in the murder,Brihani shopkeeper
× RELATED கொலையால் நடந்த முன்விரோதம்: மாஜி மாணவர் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு