புதுடெல்லி: தாமிரபரணியிலிருந்து குடிநீருக்கு மட்டுமில்லாமல் தொழிற்சாலைகளுக்கும் தண்ணீரை பயன்படுத்த முடியுமா? என ஒரு வாரத்தில் அதிகாரிகள் கூட்டத்தை கூட்டி முடிவெடுக்க தூத்துக்குடி ஆட்சியருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தாமிரபரணி தண்ணீரை பயன்படுத்துவது தொடர்பாக தூத்துக்குடியை சேர்ந்த ஜோயல் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குடிநீர் தேவைக்கு மேல் இருந்தால் மட்டுமே தொழிற்சாலைகளுக்கு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி