×

சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட சிறுத்தைக்குட்டி: தாயை அடையாளம் காண டி.என்.ஏ சோதனை

சென்னை: சென்னைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட சிறுத்தைக்குட்டியின் தாயை அடையாளம் காண டி.என்.ஏ பரிசோதனை நடத்தப்படவுள்ளது. இரு தினங்களுக்கு முன் தாய்லாந்தில் இருந்து மீனம்பாக்கம் வந்திறங்கிய பயணி ஒருவரிடம் இருந்து சிறுத்தைக்குட்டி பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் பாங்காக்கில் இருந்து பிளாஸ்டிக் கூடையில் அடைத்து குட்டியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்கப்பட்டுள்ள சிறுத்தைக்குட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிறந்து 50 நாட்களே ஆன சிறுத்தைக்குட்டி ஒரு கிலோ மட்டுமே எடை கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குட்டிக்கு வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பால், தினமும் 6 முறை கொடுக்கப்படுகிறது. அடுத்த சில தினங்களில் சிறுத்தைக்குட்டி டி.என்.ஏ பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது. அதன் தாயை அடையாளம் காணவே இந்த சோதனை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வளர்க்கப்பட்ட சிறுத்தையிடம் இருந்து குட்டியை கடத்தி வந்தனரா அல்லது காட்டில் இருந்து எடுத்து வந்தனரா என்பதை உறுதி செய்யவே இச்சோதனை உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai , Kidnappedmleopard cub,flight,Chennai,DNA test,identify,mother
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...