×

விவசாயிகள் நலனுக்காக பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளர் உறுதி

செய்யூர்: விவசாயிகள் நலனுக்காக பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் பொதுமக்களிடம் உறுதியளித்து வாக்கு சேகரித்தார். செய்யூர் (தனி) தொகுதி அதிமுக வேட்பாளர் கணிதா சம்பத் நேற்று லத்தூர் ஒன்றியத்தின் பவுஞ்சூர், திருவாத்தூர்,  பெரிய வெளிக்காடு, சின்ன வெளிக்காடு உள்ளிட்ட கிராமங்களில் தீவிர வாக்கு சேகரித்தார். அப்போது அவர் சென்ற கிராமங்களில் அதிமுக கட்சி தொண்டர்கள் அவருக்கு மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பளித்தனர். அப்போது, வேட்பாளர் கணிதா சம்பத் பேசுகையில், ‘நான் கடந்த 2 முறை திருப்போரூர் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றினேன். அதனால், எனக்கு சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய அதிக  அனுபவம் உண்டு. சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது அந்தந்த தொகுதி மக்களின் குறைகளை நான் முழுமையாக போக்கி உள்ளேன். ஏதோ வாய்க்கு வந்தபடி வாக்குறுதிகளை சொல்ல கூடிய ஆள் நான் இல்லை. நான் சொன்னதை உறுதியுடன் செய்து தருவேன். விவசாயிகள் நலனுக்காக  பாடுபடுவேன். தொகுதி மக்கள் நலமுடனும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என்றால் நடக்கவுள்ள சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, என்னை பெரு வாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்யுங்கள் என்றார். தொடர்ந்து, பவுஞ்சூர் வாரச்சந்தை பகுதிக்கு சென்ற வேட்பாளர் கணிதா சம்பத், அங்குள்ள வியாபாரிகளிடம் அதிமுக தேர்தல் வாக்குறுதி துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இதில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் ராஜி, ரஞ்சன், ஒன்றிய இளைஞர் அணி இணை செயலாளர் நித்யானந்தம்,  வெளிக்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அனிதா வீரன், பாமக ஒன்றிய செயலாளர் ஆதிகேசவன், நிர்வாகிகள் கருணாகரன், கோதண்டம் உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் இருந்தனர்….

The post விவசாயிகள் நலனுக்காக பாடுபடுவேன் என அதிமுக வேட்பாளர் உறுதி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Seyyur ,Geetha Sampath ,Seiyur ,Dinakaran ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...