×

கூட்டணி அமைக்க கட்சிகள் கிடைக்காமல் தமிழகத்தில் பாஜ தனித்து விடப்பட்டுள்ளது: திருநாவுக்கரசர் காரசார பேட்டி

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், சென்னையில் இருந்து நேற்று காலை 10 மணிக்கு மூலம் திருச்சி புறப்பட்டு சென்றார். அப்போது அவர், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி. கொடநாடு விவகாரம் தொடர்பாக திமுக நடத்துவதாக அறிவித்துள்ள ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் காங்கிரசும் பங்கேற்கும். தமிழகத்தில் கூட்டணி அமைக்க கட்சி இல்லாமல் பாஜ தனித்து விடப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.வாழ்த்து: பிரியங்காகாந்தி அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பதை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பிலும், என் சார்பிலும் தமிழக காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்களின் சார்பிலும் முழு மனதோடு வரவேற்கிறேன். ராகுல் காந்திக்கு பக்க பலமாக செயலாற்றிடவும், காங்கிரஸ் பேரியக்கத்திற்கு மென் மேலும் வலுச் சேர்த்திடவும் பிரியங்கா காந்தி எனது மனம் நிறைந்த நல் வாழ்த்துகளை மகிழ்வோடு தெரிவித்து கொள்கிறேன் என நேற்று விடுத்த அறிக்கையில் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.  



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bhajan ,Tamil Nadu ,interview ,coalition ,Thirunavukkarar Karkara , Bhajan, alone in Tamil Nadu,getting parties t, a coalition, Thirunavukkarar Karkara interview
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...