×

அதிமுகவின் கூட்டணி குறித்து பேசுவதற்கு தம்பித்துரை யார்?: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

நாகர்கோவில்: அதிமுகவின் கூட்டணி குறித்து பேசுவதற்கு தம்பித்துரைக்கு யார் அதிகாரம் கொடுத்தார்கள் எனத் தெரியவில்லை என்று மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். இந்த சந்திப்பில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டதாக அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். 


இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பொன்.ராதாகிருஷ்ணன், வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து இதுவைரை முடிவெடுக்கவில்லை என்றும், தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்துப் பேசிய, கன்னியாகுமரி மாவட்ட வளர்ச்சிக்காக மட்டுமே என்றும் கூறியிருக்கிறார். கூட்டணி குறித்து அதிமுகவில் முடிவெடுக்க, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோருக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாக பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Prabhupada , AIADMK's Coalition, Thambithurai, Ponnaradasan interview
× RELATED வைணவ பிரபந்த பாடசாலையில் அனைத்து...