- ராஜஸ்தான் கில்ட் கொடி அணிவகுத்து
- டெனாம்பெட்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தமிழ்நாடு சட்டமன்றம்
- ராஜஸ்தான்
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல் பாதுகாப்புக்காக ராணுவத்தினர் தமிழகம் வந்துள்ளனர். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதி வாரியாக துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தேனாம்பேட்டை பகுதியில் நேற்று காலை துப்பாக்கி ஏந்திய ராஜஸ்தான் காவல் குழுவினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். தேனாம்பேட்டை கிரியப்பா சாலையில் தொடங்கிய கொடி அணிவகுப்பு, சி.எச்.சாலை, எல்டாம்ஸ் சாலை, திருவள்ளுவர் சாலை, எஸ்ஐடி கல்லூரி சாலை, எஸ்.எம்.சாலை, அமுதம் காலனி வழியாக டாக்டர் தாமஸ் சாலையில் முடிவடைந்தது. தேனாம்ேபட்டை உதவி கமிஷனர் தேவராஜ் தலைமையில் நடந்த கொடி அணிவகுப்பில் தேனாம்பேட்டை போலீசாரும் கலந்து கொண்டு பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தினர்….
The post தேனாம்பேட்டையில் ராஜஸ்தான் காவல் குழு கொடி அணிவகுப்பு appeared first on Dinakaran.