×

கடுமையான பனிப்பொழிவால் நாட்டின் பிற பகுதியில் இருந்து காஷ்மீர் மாநிலம் துண்டிப்பு

ஸ்ரீநகர்: கடுமையான பனிப்பொழிவு காரணமாக நாட்டின் பிற பகுதிகளில் இருந்து காஷ்மீர் மாநிலம் துண்டிக்கப்பட்டுள்ளது. தரைவழி, வான்வெளி போக்குவரத்து முடங்கியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு, தற்போது பனிப்பொழிவு கடுமையாக உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை பெய்த பனிப்பொழிவு, நேற்று காலை வரை தொடர்ந்து பெய்தது. இதனால், ஸ்ரீநகரில் நேற்று காலை ஒரு அடிக்கு மேல் சாலைகளில் பனி குவிந்திருந்தது. குப்வாரா பகுதியில் ஒன்றேகால் அடிக்கு மேல் பனி குவித்திருந்தது. உயரமான மலைப் பகுதிகளிலும் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. இதனால், ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை உட்பட இதர தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. எதையும் பார்க்க முடியாத அளவுக்கு பனிப்பொழிவு மோசமாக இருப்பதால், நகர் சர்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. காஷ்மீரில் நேற்று முன்தினம் இரவு வெப்பநிலை மைனஸ் 1.3 டிகிரி செல்சியசாக இருந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kashmir ,country , Kashmir,country, severe snowfall
× RELATED அடித்து ஊத்திய பேய்மழை…தண்ணீரில் மிதக்கும் காஷ்மீர்..!!