×

சபரிமலையில் பெண்கள் வழிபாடு பாலின சமத்துவத்துக்கு கிடைத்த வெற்றி: திருமாளவன் அறிக்கை

சென்னை: சபரிமலையில் பெண்கள் வழிபாடு நடத்தியது பாலின சமத்துவத்திற்கு கிடைத்த வெற்றி என்று விசிக தலைவர் திருமாளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: பாலின சமத்துவத்தை உறுதி செய்யும் விதமாக அனைத்து வயதுப் பெண்களும் சபாரிமலையில் வழிபடலாம் என்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தவிடாமல் சனாதனவாதிகள் தடுத்து வந்தனர். உச்சநீதிமன்றத் தீர்ப்பை நடைமுறைபடுத்தவிடாமல் மத்தியில் ஆளும் அரசியல் கட்சியே வன்முறையில் ஈடுபட்ட அவலமான சூழலை இந்த நாடு பார்த்தது. இதனிடையில் தமது உரிமையை நிலைநாட்ட பெண்கள் விடாமல் போராடி வந்தனர். அந்தப் போராட்டத்தில் மகத்தான வெற்றியை இப்போது ஈட்டியுள்ளனர். பிந்து, கனகதுர்கா என்ற அந்த  இரண்டு பெண்களின் பெயர்களும் வரலாற்றில் நீங்கா இடம்பிடிக்கும் என்பது உறுதி. அவர்களுக்கு சனாதன வெறியர்களால் ஊறு நேரிடலாம் . எனவே, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

அவர்கள் வழிபடுவதற்கு உரிய பாதுகாப்பை வழங்கிய  மாண்புமிகு பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசை மனமாரப் பாராட்டுகிறோம். தற்போது சபரிமலை கோவிலில் பெண்கள் வழிபாடு செய்துள்ளதைத் தொடர்ந்து கோயில் கருவறையை மூடி புனிதப்படுத்தும் சடங்குகள் செய்யப்படுவதாகத் தகவல்கள் வந்துள்ளன. இது கோயிலின் மரபுக்கும், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கும் எதிரானது. எனவே அதற்குப் பொறுப்பானவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இனிமேலும் சபரிமலையில்  பெண்கள் வழிபடுவதற்கு சனாதனவாதிகள்  இடையூறு செய்தால் அவர்களை இரும்புக் கரம் கொண்டு கேரள அரசு ஒடுக்கிடவேண்டும். பெண்களுக்கு உரிய பாதுகாப்பை அளித்திடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Victory for Gender Equality: Statement of Thirumalavan ,Sabarimala , Women worship, Sabarimala, Thirumavalavan
× RELATED சரக்கு போக்குவரத்து, ஆம்புலன்ஸ்...