×

கிளி யாருக்கு சொந்தம் ? நியாயம் கேட்க காவல் நிலையம் சென்ற எஜமானர்கள்

லக்னோ : உத்தரப் பிரதேசத்தில் கிளி யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைக்கு தீர்வு காண 2 குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் காவல் நிலையம் சென்றுள்ளனர். ஹரித்வாரில்  வசிக்கும் ராஜ்வீர் என்பவரின் கிளி கடந்த ஒரு ஆண்டுக்கு முன் காணாமல் போனது. பல இடத்தில் தேடியும் எந்த பலனும் இல்லாத நிலையில் அவர் தன்னை சமாதானம்படுத்தி கொண்டார். இந்நிலையில் தற்செயலாக அவரது தோழியான முஸ்கான் வீட்டிற்கு சென்ற போது அதிர்ச்சி அடைந்தார். காரணம் அவர் செல்லமாக வளர்த்த கிளி முஸ்கான் வீட்டில் வளர்க்கப்பட்டு வருகிறது.

தனது முன்னாள் எஜமானரை அடையாளம் கண்ட கிளி அவரின் பெயரை சொல்லி அழைத்துள்ளது. இதனால் மனம் உருகிய ராஜ்வீர் தனது கிளி திருப்பி அளிக்கும்படி முஸ்கானிடம் கேட்டுள்ளார். ஆனால் தன்னிடம் தஞ்சம் அடைந்துள்ள கிளி தனக்கு தான் சொந்தம் என்று முஸ்கான் வாதிட்டார். நீண்ட வாக்குவாதத்திற்கு சென்ற இந்த சண்டை பிரம்புரி காவல் நிலையத்தை அடைந்தது. காவலர்கள் இரு குடும்பத்தினரை சமாதானப்படுத்த பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் ஏதும் கிடைக்கவில்லை. இதையடுத்து ராஜ்வீர் மற்றும் முஸ்கான் குடும்பத்தினர் தாங்களாகவே ஒரு முடிவுக்கு வரும் வரை கிளி காவல்நிலையத்தில் இருக்கட்டும் என்று கூறி அனுப்பி வைத்தனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : masters ,police station , Cli, Rajivir, Police Station, Masters, Haridwar
× RELATED மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன்: அரையிறுதியில் சிந்து