திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சக்தி வாய்ந்த வெடிசத்தம் கேட்டு வருகிறது. நேற்று பகல் 1 மணி அளவில், திடீரென்று பயங்கர சத்தம் கேட்டது. திண்டுக்கல், வேடசந்தூர், சாணார்பட்டி, நத்தம், ரெட்டியார்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் இந்த சத்தம் உணரப்பட்டது. நில அதிர்வை போன்று சத்தம் இருந்ததால் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். வேடசந்தூர் மக்கள் கூறுகையில், ‘‘வேடசந்தூர் பகுதியில் வடமதுரை, குஜிலியம்பாறை, எரியோடு என அனைத்து இடங்களிலும் தொடர்ந்து வெடிசத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது. தற்போது கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து விமான சத்தமும், வெடி சத்தமும் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் ஆடு, மாடுகள், நாய்கள் பயந்து ஓடுகின்றன. சத்தத்தை கேட்கவே பயமாக உள்ளது.’’ என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி