×

தாம்பரத்தில் மேற்கொள்ளப்படும் வெள்ள தடுப்பு பணியை காஞ்சி கலெக்டர் ஆய்வு

தாம்பரம்: தாம்பரம் - தர்காஸ் சாலையில் அடையாறு ஆற்றின் குறுக்கே 3.26 கோடி மதிப்பீட்டில்  நடைபெறும் 7 கண் பாலப் பணிகளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.  அப்போது பணியின் முன்னேற்றம் குறித்தும், பணி முடிவதற்கான காலம் குறித்தும் கேட்டறிந்தார். அதிக மழை பெய்தாலும் தண்ணீர் தடைபடாமல் செல்லத்தக்க வகையில் பணிகள் நடைபெறுகிறது என அதிகாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தனர். பின்னர் சோமங்கலம் - அடையாறு கிளை வாய்க்காலை பார்வையிட்டு அங்கு நீர் தேக்கம் கட்டுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொண்டு திட்டஅறிக்கை சமர்ப்பிற்க்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

பின்னர் தர்காஸ் சாலையில் வெள்ள தடுப்பு பணியாக கான்க்ரீட் மூடியுடன் கூடிய மூடு கால்வாய் 20 கோடி மதிப்பில் அமைக்கும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டார். மேலும் அப்பகுதியில் பணி நடைபெறும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படாமலும், போக்குவரத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது தொடர்பாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் சிட்லபாக்கம் பேரூராட்சி பாபு தெருவில் 8 கோடி மதிப்பீட்டில் கான்கிரீட் மூடியுடன் கூடிய மூடு கால்வாய் அமைக்கும் பணிக்கு பூமிக்கு அடியில் செல்லும் மின்கம்பி வழித்தடங்களை பணிக்கு இடையூறு இல்லாமல் சரிசெய்து தருமாறு மின்சார துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tandon ,Collector ,Kanchi , Flood control work ,Kanchi Collector
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...