×

சென்னையில் இருந்து கேரளா புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் இயந்திரக்கோளாறு காரணமாக தரையிறக்கம்

சென்னை : சென்னையில் இருந்து கேரளா புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டது. சென்னையில் இருந்து கோழிக்கோட்டிற்கு காலை 7 மணிக்கு 59 பயணிகள் மற்றும் 4 விமான ஊழியர்கள் என மொத்தம் 63 பேருடன் ஸ்பைஸ்ஜெட் விமானம் புறப்பட்டது. நடுவானில் விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டதாக விமான கட்டுப்பாடு அறை அதிகாரிகளுக்கு விமானி தகவல் அளித்தார். இதனால் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டது. இயந்திர கோளாறை உடனடியாக கண்டறிந்ததால் விமானத்திலிருந்த 63 பேரும் உயிர் தப்பினர். பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு ஓய்வு அறையில் தங்க வைக்கப்பட்டனர். இதையடுத்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறு குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இதே போன்று  சென்னையில் இருந்து காலை 9.20க்கு மதுரை சென்று சேரும் ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டது.தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். மதுரையில் இருந்து ஸ்பைஸ்ஜெட் விமானம் மூலம் சென்னை வரும் பயணிகளுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஸ்பைஸ்ஜெட் விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் டிக்கெட் பணத்தை திரும்ப பெறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 2 ஸ்பைஸ்ஜெட் விமானங்களில் கோளாறு ஏற்பட்டது குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : SpiceJet ,Chennai , Chennai,SpiceJet,iyantirakkolaru
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...