×

விபசார ஏட்டை பிடிக்க 2 தனிப்படை

சென்னை:  சென்னை சூளைமேடு நமச்சிவாயபுரத்தை சேர்ந்த பாலியல் பெண் புரோக்கர் ஜெயந்தி (37) என்பவருடன் சேர்ந்து, கால் டாக்சி டிரைவர் விஸ்வநாதனை அடித்து பணம் பறித்த வழக்கில் கோயம்பேடு சிஎம்பிடி காவல் நிலைய சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டரின் கார் டிரைவர் பார்த்திபன் மீது விபசாரத்தில் ஈடுபட்டது உட்பட 4 பிரிவுகளின் கீழ் அமைந்தகரை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் பெண் புரோக்கர் ஜெயந்தியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமை காவலர் பார்த்திபன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதை தொடர்ந்து கால் டாக்சி டிரைவர் விஸ்வநாதனை அடித்து பணம் பறித்த விவகாரத்தில் அமைந்தகரை போலீசார் தலைமை காவலரை கைது செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், தான் கைது செய்யப்பட கூடும் என்று முன்கூட்டியே தெரிந்து அவர் மாயமாகிவிட்டார். தலைமறைவாக உள்ள பார்த்திபனை பிடிக்க உயர் போலீசார் உத்தரவுப்படி 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 பார்த்திபன் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் தனது செல்போன் இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அவரது உறவினர்கள் ெசல்போன்களை போலீசார் ரகசியமாக கண்காணித்து வருகின்றனர். இதற்கிடையே பார்த்திபன் தனது சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல்  கிடைத்தது. அதன்படி தனிப்படை ஒன்று செஞ்சி விரைந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மற்றொரு தனிப்படை தலைமை காவலர் பார்த்திபன் பயன்படுத்திய செல்போன் எண்ணை வைத்து சைபர் க்ரைம் உதவியுடன் கடந்த 5 மாதங்களாக அவர் தொடர்பு கொண்ட நபர்கள் குறித்த பட்டியல் எடுக்கப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் பல முறை அவருக்கு மும்பை, டெல்லி மற்றும் ஆந்திராவில் இருந்து அதிகளவில் அழைப்புகள் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெளி மாநில அழைப்புகளை வைத்தும் வெளி மாநிலங்களுக்கு பார்த்திபன் தப்பி சென்றுள்ளாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : prostitute , prostitute
× RELATED கொரோனா ஊரடங்கு எதிரொலியால் ரூ.50 கோடி...