புதுக்கோட்டை: திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்கு வரும் வழியில் மாத்தூர் அருகே மின்வாரிய ஊழியர்கள் தங்கியிருந்த பகுதிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்றார். அப்பொழுது ஊழியர்களுக்கு சப்பாத்தி சுட்டு கொடுத்து பரிமாறி அவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். மேலும் புதுக்கோட்டையில் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 3 நாட்களுக்குள் 100% மின்விநியோகம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
கஜா புயல் பாதிப்பு மீட்புப் பணியை பாராட்டிய எதிர்க்கட்சியினருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், இதே போன்று ஊக்குவித்தால் உறக்கமின்றி உழைக்க தயார் என்று கூறினார். இதனிடையே புதுக்கோட்டையில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட அரசு பள்ளி மாணவிகளுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் பாடப்புத்தகம் வழங்கினார். ராணியார் அரசு பள்ளி மாணவிகளிடம் குறைகளை கேட்டு, மாணவிகளுக்கு சீருடைகளையும் விஜயபாஸ்கர் வழங்கினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி