சென்னை: கஜா புயல் பாதித்த மாவட்டங்களில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் விரைவில் ஆய்வு நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய குழு ஆய்வை முடித்துவிட்டு சென்ற பின்னர் மத்திய அமைச்சர் நிர்மலா ஆய்வு செய்ய இருப்பதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. மேலும் புயல் பாதித்த நாகை, திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி வரும் 28-ம் தேதி மீண்டும் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாகவும் தாகவல் தெரிவிக்கப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி