டெல்லி: கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கேட்டுள்ளேன் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தற்காலிக சீரமைப்பு பணிக்காக ரூ.1,500 உடனடியாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார் எனவும் முதல்வர் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி