சென்னை : ஜிசாட் 29 செயற்கைக்கோளை விண்ணில் ஏவுவதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியது. முன்னதாக ஜிசாட்-29 செயற்கைகோள் திட்டமிட்டப்படி வரும் 14-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்தது. நவ.14 மாலை 5.08 மணிக்கு ஜிஎஸ்எல்வி மாக்-3 விண்ணில் செலுத்தப்படுகிறது. 3,423 கிலோ எடை கொண்ட தகவல் தொழில்நுட்ப செயற்கைக்கோள் ஜிசாட் 29-ஐ எடுத்துச்செல்கிறது. மழை, புயல் காரணமாக ஏவப்படாது என செய்தி வெளியான நிலையில் ஜிசாட்-29 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி