×

பராமரிப்பு பணி காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில் சிங்கபெருமாள்கோவில் – செங்கல்பட்டு ரயில் நிலையங்கள்  இடையே, நாளை மற்றும் 31 மற்றும் ஏப்ரல் 2, 3 ஆகிய 4 நாட்களில்  பராமரிப்பு  பணி  நடைபெறவுள்ளதால் புறநகர் சிறப்பு ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரையிலிருந்து காலை 9.32, 10.08 மணிக்கு மற்றும் 10.56 மணிக்கு செங்கல்பட்டு வரை இயக்கப்படும்  ரயில்கள் நாளை, வரும் 31 மற்றும் ஏப்ரல் 2, 3ம் தேதிகளில் சிங்கபெருமாள்கோவில் – செங்கல்பட்டு ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. அதேப்போல், செங்கல்பட்டிலிருந்து காலை 11.30 மணி, பிற்பகல் 12.20 மணி மற்றும்  பிற்பகல் 1 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்  ரயில்கள் நாளை மற்றும் 31 மற்றும் ஏப்ரல் 2, 3ம் தேதிகளில் செங்கல்பட்டு  – சிங்கபெருமாள்கோவில் ரயில் நிலையங்கள் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. மேலும், திருமால்பூரிலிருந்து காலை 10.40 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும்  ரயில் நாளை, வரும் 31 மற்றும் ஏப்ரல் 2, 3 ஆகிய தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. ரத்து செய்யப்பட்ட ரயிலுக்கு பதிலாக திருமால்பூர் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்கு சிறப்பு ரயில் ஒன்று இயக்கப்படும். இந்த சிறப்பு ரயில் சென்னை கடற்கரை வரை அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. …

The post பராமரிப்பு பணி காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Chennai Egmore ,Villupuram ,Singaperumalkoil ,Chengalpattu ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...