×

வேலை நிறுத்தம் தொடர்பாக யமஹா ஊழியர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

சென்னை: சென்னை அருகே ஒரகடத்தில் உள்ள யமஹா தொழிற்சாலை ஊழியர்கள் நடத்திய வேலை நிறுத்தம் தொடர்பாக இன்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. காஞ்சிபுரத்தில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் யமஹா நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமூகமான முடிவு ஏற்படவில்லை என்பதால் அடுத்தக் கட்டமாக சென்னையில், கோட்டை நோக்கி ஊர்வலமாக சென்று முற்றுகை போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் உள்ள யமஹா தொழிற்சாலையில் தொழிற்சங்கம் தொடங்கியதால் ஊழியர்கள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வலியுறுத்தி கடந்த 50 நாட்களாக 500கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கு ஆலை நிர்வாகம் தீர்வு காணவில்லை என்றால் போராட்டத்தை தீவிரப்படுத்த இருப்பதாக தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Negotiations ,Yamaha ,strike , Yamaha Staff,Strike,Talk,Failure
× RELATED சென்னை மயிலாப்பூர், அபிராமபுரம்...