சென்னை : இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 3வது டி20 போட்டி நடைபெறவுள்ளது. ஏற்கனவே டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடைசி மற்றும் 3வது போட்டி சென்னையில் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெறவுள்ளது. இந்திய அணி தொடரை கைப்பற்றியதை தொடர்ந்து முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க பிசிசிஐ முடிவெடுத்துள்ளது. உமேஷ் யாதவ், ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு பதிலாக சித்தார்த் கவுல் மற்றும் ஷாபாஸ் நதீம் அணியில் இடம்பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி