×

ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையை முடிக்க மேலும் 7 மாதங்கள் ஆகும் : நீதிபதி ராஜேஸ்வரன்

சென்னை : ஜல்லிக்கட்டு தொடர்பான விசாரணையை முடிக்க மேலும் 7 மாதங்கள் ஆகும் என்று முன்னாள் நீதிபதி ராஜேஸ்வரன் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு விசாரணை ஆணைய தலைவர் ராஜேஸ்வரன் கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது 1,956 பேரிடம் சாட்சியம் பெற வேண்டியுள்ளதால் ஜல்லிக்கட்டு விசாரணைக்கு காலம் தேவைப்படுகிறது என்றார். மேலும் விசாரணை ஆணையம் என்பது ஒரு கண்துடைப்பு அல்ல; உண்மையை வெளிகொண்டு வருவதற்கான அமைப்பு  என்றும் விசாரணை ஆணைய அறிக்கைகளை அரசிடம் சமர்ப்பித்து விடுகிறோம், நடவடிக்கை எடுப்பது அரசின் கையில் தான் உள்ளது என்றும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : trial ,Rajeswaran , The trial of Jallikattu is about 7 months to complete: Judge Rajeswaran
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா