சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகள் இணைய வாய்ப்பில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணையுமா என்ற கேள்விக்கு பதிலளித்தார். புதியவர்கள் மக்கள் பிரச்சனையில் என்ன நிலைப்பாடு எடுப்பார்கள் என தெரியாது என்று கூறினார். கூட்டணி குறித்து காங்கிரசுடன் பேசப்படும் என கமல் கூறி வரும் நிலையில், கே.பாலகிருஷ்ணன் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி