கவுகாத்தி: அசாமில் 5 பேரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். அசாம் மாநிலத்தின் தின்சுகியாகி மாவட்டத்தில் கெரோனிபாரி பகுதியில் மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், சாலையோரத்தில் உள்ள தாபாவில் விளையாடிக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். 2 பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலங்களை மீட்டனர். இந்த சம்பவத்துக்கு அம்மாநில முதல்வர் சர்பானந்த சோனோவால் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உல்பா தீவிரவாத அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்றும் காவல்துறையினர் சந்தேகம் அடைந்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என உல்பா அமைப்பு மறுத்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி