×

கந்தர்வகோட்டை அருகே இடியும் அபாயத்தில் அங்கன்வாடி கட்டிடம்

கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அருகே வாண்டையன்பட்டியில்  அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது. இங்கு அப்பகுதிகளை சேர்ந்த 20 குழந்தைகள்  வந்து பருவ கல்வி பயின்று ஊட்டச்சத்து சாப்பிட்டு செல்கின்றனர். இந்த மைய கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ளது.  நேற்று மழை பெய்த காரணத்தினால் கட்டிடம் இடிந்து விழுமோ என்ற அச்சத்தில்  பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அங்கன்வாடி மையத்திற்கு அனுப்பவில்லை.

இதையறிந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் அதிகாரிகள் சென்று பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது தற்காலிகமாக கிராம சேவா மையத்தில் அங்கன்வாடி இயக்கப்படும். பழைய அங்கன்வாடி மையத்தை பூட்டி விட்டு இது குறித்து தங்களது மேலதிகாரிகளுக்கு தெரிவிப்பதாக உறுதியளித்தார். அதன் பின்னர் பெற்றோர் தங்களது குழந்தைகளை அங்கன்வாடிக்கு அனுப்பி வைத்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : building ,collapse ,Gandharvat , Gandharvat, Risk, Anganwadi, Building
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...