×

சபரிமலை சர்ச்சை பேச்சு பகிரங்க மன்னிப்பு கோரினார் மலையாள நடிகர்

திருவனந்தபுரம்: சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து, கேரளா முழுவதும் ேபாராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பிரபல மலையாள வில்லன் நடிகர் கொல்லம் துளசி, ‘‘உச்ச  நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் சபரிமலை கோயிலுக்கு சென்று விடலாம் என்று சில இளம்பெண்கள் கருதுகின்றனர். அப்படி வரும் இளம்பெண்களை இரண்டாக பிளந்து ஒரு பகுதியை டெல்லிக்கும், இன்னொரு பகுதியை  முதல்வர் பினராய் விஜயன் அலுவலகத்திற்கும் அனுப்பி வைக்கவேண்டும்’’ என்றார்.இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி நிலையில் கேரள மகளிர் ஆணையம் மற்றும் கொல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.இந்த நிலையில் கொல்லம் துளசி, ‘‘பக்தியால் ஏற்பட்ட உணர்ச்சி  பெருக்கால் அவ்வாறு பேசி விட்டேன். எனது கருத்துக்களுக்காக நான் பகிரங்க மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sabarimala ,actor ,Malayalam , Sabarimala controversy,talk openly, apologized ,Malayalam actor
× RELATED சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு