×

சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு

திருவனந்தபுரம்: சித்திரை விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடம்தோறும் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த வருடத்துக்கான சித்திரை விஷு பண்டிகை வரும் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. வரும் 14ம் தேதி பிரசித்தி பெற்ற விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. வரும் 18ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும். தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி விட்டது.

The post சித்திரை விஷு சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Chitrai Vishu Sabarimala Temple Walk ,Thiruvananthapuram ,Chitrai Vishu festival ,Sabarimala Ayyappan temple ,
× RELATED திருச்சூரில் தண்ணீர் தேடி கிணற்றுக்குள் தவறி விழுந்த யானை உயிரிழப்பு..!!