சென்னை: நந்தனா பேலஸ் உணவகம் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பெங்களூரு நகரில் செயல்பட்டு வருகிறது. சுவை மிகுந்த ஆந்திர உணவு வகைகளை வழங்கிவரும் நந்தனா பேலஸ், கடந்த ஆண்டு தனது 15வது கிளையை சென்னை ஓ.எம்.ஆர்.சாலையில் மினி பார்ட்டி ஹால் வசதியுடன் தொடங்கி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையில் 2வது உணவகமாக 17வது கிளையை வேளச்சேரி 100 அடி சாலை லட்சுமி நகரில் தொடங்கி உள்ளது. சிகப்பு மிளகாய், புளி, கோங்குரா மற்றும் ஆந்திரா மாநிலத்தின் மிக பிரபலமான ஆவக்காய், மாங்காய் சட்னி ஆகியவற்றை சென்னைக்கு கொண்டு வந்துள்ளது. நந்தனா பேலஸ் மேலாண் இயக்குனர் மற்றும் தலைவர் டாக்டர் ஆர்.ரவிச்சந்தர் கூறுகையில், ‘‘தரம், சிறந்த துரித சேவை, நல்ல அனுபவங்களை அளிப்பதே நந்தனாவின் தனி முத்திரை,’’ என்றார். அடையார் ஆனந்த் பவன் குழும நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் கே.டி.வெங்கடேஷ் ராஜா, கே.டி.ஸ்ரீநிவாச ராஜா ஆகியோர் இந்த உணவகத்தை குத்துவிளக்கு ஏற்றி துவைக்கி வைத்தனர். திறப்பு விழாவில் ஏராளமானோர் பங்கேற்று சிறப்பித்தனர்….
The post வேளச்சேரி 100 அடி சாலையில் நந்தனா பேலஸ் உணவகம் திறப்பு appeared first on Dinakaran.