×

சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் தேமுதிகவினர் 200 பேர் திமுகவில் இணைந்தனர்

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் 200க்கும் மேற்பட்ட தேமுதிகவினர் மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் திமுகவில் இணைந்தனர். திருவொற்றியூர் கிழக்கு பகுதி திமுக சார்பில், பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மாலை பெரியார் நகர் பகுதியில் நடந்தது. மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு தலைமை தாங்கினார். இதில தமிழ்நாடு பாடநூல் நிறுவன தலைவர் திண்டுக்கல் லியோனி, மாவட்ட செயலாளர் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, கலாநிதி வீராசாமி எம்பி, கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆகியோர், பேராசிரியர் அன்பழகனின் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதைத் தொடர்ந்து, நலிவுற்றவர்களுக்கு தையல் மெஷின், புடவை, மற்றும் மாற்றுத்திறனாளிக்கு செல்போன், பைபர் படகு உடைந்து பாதிக்கப்பட்ட மீனவருக்கு நிதியுதவி உள்பட 100க்கும் மேற்பட்டோருக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட துணை செயலாளர் உத்தண்டராமன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட தேமுதிகவினர், மாவட்ட செயலாளர் சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு உறுப்பினர் படிவத்தை எம்எல்ஏ வழங்கினார். இதில் அவைத் தலைவர் குறிஞ்சி கணேசன், மேற்கு பகுதி செயலாளர்கள் வை.ம.அருள்தாசன், துக்காராமன், ஏ.வி.ஆறுமுகம், ராமகிருஷ்ணன், மதிவாணன், ஆனந்தன், ஆசைத்தம்பி, ஆர்.எஸ்.சம்பத், எம்.வி.குமார், குமரேசன், மணிகண்டன், சதீஷ் மற்றும் கவுன்சிலர்கள், நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்….

The post சுதர்சனம் எம்எல்ஏ தலைமையில் தேமுதிகவினர் 200 பேர் திமுகவில் இணைந்தனர் appeared first on Dinakaran.

Tags : MLA ,Thiruvottiyur ,District Secretary ,Suthiranam ,Thiruvottur ,Thiruvattiyur East ,Freedom ,
× RELATED தர்மபுரி எம்எல்ஏ ஆபீஸ் பூட்டு உடைத்து திறப்பு