×

பழமையான 114 கோயில்களில் திருப்பணிகள்: வல்லுநர் குழு ஒப்புதல்

சென்னை: அறநிலையத்துறையின் கீழ் உள்ள தொன்மையான 114 கோயில்களில் திருப்பணிகள் தொடங்க மாநில அளவிலான வல்லுநர் குழு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை அலுவலகத்தில் வாரந்தோறும் மாநில அளவிலான வல்லுநர் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று தொன்மையான கோயில்களை பழமை மாறாமல் புதுப்பித்தல் தொடர்பான மாநில அளவிலான 47வது வல்லுநர் குழு கூட்டம் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சென்னை, வில்லிவாக்கம் வினை தீர்க்கும் விநாயகர் கோயில், மேற்குமாம்பலம், சத்யநாராயண பெருமாள் கோயில், மயிலாப்பூர் மரகதாம்பாள் சமேத மல்லீஸ்வரர் கோயில், திருப்பூர் ஆதியூர் ஆதிநாராயணப்பெருமாள் கோயில், ஊத்துக்குளி கைலாசநாதர் கோயில், ராணிப்பேட்டை வேணுகோபாலசுவாமி கோயில், திருவள்ளூர் பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோயில்  உள்ளிட்ட 114 கோயில்களில் திருப்பணிகள் தொடங்குவதற்கு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. மாநில அளவிலாக வல்லுநர் குழு பரிந்துரைகளின் அடிப்படையில் கோயில்களில் திருப்பணிகளுக்கு திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடக்கப்பட உள்ளது….

The post பழமையான 114 கோயில்களில் திருப்பணிகள்: வல்லுநர் குழு ஒப்புதல் appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED சென்னை கோயம்பேடு மேம்பாலத்தில் ஆண்...