×

அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி: போலீசார் விசாரணை

துரைப்பாக்கம்,: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மேரி (65) இவர், நேற்று முன்தினம் காலை சோழிங்கநல்லூர் ராஜிவ்காந்தி சாலையில் நடந்து சென்றபோது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மூதாட்டியை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆட்டோ மூலம் அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில், அந்த மூதாட்டி சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையோரம் இறந்து கிடந்தார். தகவலறிந்த செம்மஞ்சேரி போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டி இறந்ததால், ஆட்டோ டிரைவர் சாலையோரம் வீசி விட்டு சென்றாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….

The post அடையாளம் தெரியாத வாகனம் மோதி மூதாட்டி பலி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Duraipakkam ,Mary ,Semmancheri Tsunami ,Choshinganallur Rajivkandi road ,
× RELATED சென்னை ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் காவல் ஆணையர் ஆய்வு!!