×

மின்வயர் மீது லாரி உரசியதால் தீ விபத்து உடல் கருகி புது மாப்பிள்ளை பலி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே மறைமலைநகரில், லாரி மீது மின்வயர் உரசியதால் ஏற்பட்ட தீ விபத்தில், தடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த வாலிபர், உடல் கருகி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் வசந்தகுமார் (24). செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில், தனியார் கம்பெனியில், லாரி டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு, அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்தது. வசந்தகுமார் வேலை செய்யும் தனியார் கம்பெளியில் இருந்து, பல்வேறு தொழிற்சாலைகளுக்கு கெமிக்கல், ஆர்டரின் பேரில், வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், நேற்று காலை வசந்தகுமார், கம்பெனிக்கு வெளியே, கெமிக்கல் நிரப்பட்டு இருந்த மினி கன்டெய்னர் லாரியை ரிவர்சில் எடுத்து சென்றார். அப்போது, அருகில் உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து வெளியேறும் உயர் அழுத்த மின்வயர் மீது, லாரியின் பின்புறம் உரசியது. இதனால், மின்சாரம் பாய்ந்தது, லாரி தீப்பற்றி எரிந்தது. உடனே வசந்தகுமார் லாரியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றார். அதற்குள் உடல் முழுவதும் தீ பரவி, சம்பவ இடத்திலேயே, அவர் உடல் கருகி பரிதாபமாக பலியானார்.தகவலறிந்து, மறைமலைநகர் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைத்தனர். அதற்குள் லாரி முழுவதுமாக எரிந்து நாசமானது. தொடர்ந்து மறைமலைநகர் போலீசார் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில், வசந்தகுமார் தீ விபத்தில் இறந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தீப்பற்றி எரிந்த அரசு பேருந்து: சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு, அரசு விரைவு பஸ் புறப்பட்டது. இதில் 45க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். செங்கல்பட்டு பைபாஸ் சாலை, காஞ்சிபுரம் செல்லும் சாலையின் பாலம் அருகே சென்றபோது, திடீரென பஸ்சின் இன்ஜின் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. சில நொடிகளில் தீப்பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர், சாலையின் நடுவில் பஸ்சை நிறுத்தினார். பயணிகள், அலறியடித்து கொண்டு, பஸ்சில் இருந்து ஓடினர்.இதை பார்த்ததும், அப்பகுதி மக்கள் ஓடிவந்து, பஸ் மீது தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதையடுத்து, மாற்று பஸ் மூலம் பயணிகள் அனைவரும் ஒரு மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றனர். தீப்பற்றி எரிந்த பஸ் நடுவழியில் நிறுத்தப்பட்டதால், அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுதொடர்பாக,  செங்கல்பட்டு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால்,   அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது….

The post மின்வயர் மீது லாரி உரசியதால் தீ விபத்து உடல் கருகி புது மாப்பிள்ளை பலி appeared first on Dinakaran.

Tags : Pudu Mappillai ,Chengalpattu ,
× RELATED செங்கல்பட்டு மாவட்டத்தில் நடந்து...